135விரை ஏறு நீறு அணிந்து, ஓர் ஆமை பூண்டு,
     வெண்தோடு பெய்து, இடங்கை வீணை ஏந்தி,
திரை ஏறு சென்னிமேல்-திங்கள் தன்னைத் திசை
        விளங்க வைத்து, உகந்த செந்தீ வண்ணர்,
அரை ஏறு மேகலையாள் பாகம் ஆக ஆர்
               இடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன்
புரை ஏறு தாம் ஏறி, பூதம் சூழ, “புறம்பயம் நம்
                     ஊர்” என்று போயினாரே!.