6.15 திருக்கருகாவூர்
திருத்தாண்டகம்
148குருகு ஆம்; வயிரம் ஆம்; கூறும் நாள் ஆம்;
     கொள்ளும் கிழமை ஆம்; கோளே தான் ஆம்;
பருகா அமுதம் ஆம்; பாலின் நெய் ஆம்;
       பழத்தின் இரதம் ஆம்; பாட்டின் பண் ஆம்;
ஒரு கால் உமையாள் ஓர்பாகனும்(ம்) ஆம்;
           உள்-நின்ற நாவிற்கு உரையாடி(ய்) ஆம்;
கரு ஆய் உலகுக்கு முன்னே தோன்றும் கண்
                   ஆம்-கருகாவூர் எந்தைதானே.