153 | மூலன் ஆம்; மூர்த்தி ஆம்; முன்னே தான் ஆம்; மூவாத மேனி முக்கண்ணினான் ஆம்; சீலன் ஆம்; சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம்; செஞ்சுடர்க்கு ஓர் சோதி தான் ஆம்; மாலன் ஆம்; மங்கை ஓர்பங்கன் ஆகும்; மன்று ஆடி ஆம்; வானோர் தங்கட்கு எல்லாம் காலன் ஆம்; காலனைக் காய்ந்தான் ஆகும்; கண் ஆம்-கருகாவூர் எந்தைதானே. |