419“ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை-இது நீங்கல்
                ஆம்; விதி உண்டு” என்று சொல்ல
வேண்டாவே; நெஞ்சமே! விளம்பக் கேள், நீ;
    விண்ணவர் தம் பெருமானார், மண்ணில் என்னை
ஆண்டான், அன்று அரு வரையால் புரம்மூன்று எய்த
         அம்மானை, அரி அயனும் காணா வண்ணம்
நீண்டான், உறை துறை நெய்த்தானம் என்று
          நினையுமா நினைந்தக்கால் உய்யல் ஆமே.