79 | செற்றான் காண், என் வினையை;தீ ஆடீ காண்; திரு ஒற்றியூரான் காண்;சிந்தைசெய்வார்க்கு உற்றான் காண்;ஏகம்பம் மேவினான் காண்; உமையாள் நல்கொழு நன் காண்;இமையோர் ஏத்தும் சொல்-தான் காண்;சோற்றுத்துறை உளான் காண்; சுறாவேந்தன் ஏவலத்தை நீறா நோக்கக் கற்றான் காண்-காளத்தி காணப்பட்ட கணநாதன் காண்;அவன் என் கண் உளானே. |