98 | காடு அலால் கருதாதார்;கடல்நஞ்சு உண்டார்;களிற்று உரிவை மெய் போர்த்தார்;கலன் அது ஆக; ஓடு அலால் கருதாதார்;ஒற்றியூரார்;உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக் கண்ணால் பீடு உலாம் தனை செய்வார்;பிடவம், மொந்தை, குடமுழவம், கொடுகொட்டி, குழலும், ஓங்கப் பாடலார்;ஆடலார்;பைங்கண் ஏற்றார்; பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே. |