8 | கார் ஆனை ஈர் உரிவைப் போர்வையானை, காமரு பூங் கச்சி ஏகம்பன் தன்னை, ஆரேனும் அடியவர்கட்கு அணியான் தன்னை, அமரர்களுக்கு அறிவு அரிய அளவு இலானை, பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை, பரனை, எண் இல் பேரானை, பெரும்பற்றப்புலியூரானை, - பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே. |