| 217 | மால்யானை மத்தகத்தைக் கீண்டார் போலும்; மான்தோல் உடையா மகிழ்ந்தார் போலும்;
 கோலானைக் கோ அழலால் காய்ந்தார் போலும்;
 குழவிப்பிறை சடைமேல் வைத்தார் போலும்;
 காலனைக் காலால் கடந்தார் போலும்; கயிலாயம்
 தம் இடமாக் கொண்டார் போலும்;
 ஆல், ஆன் ஐந்து ஆடல், உகப்பார்
 போலும்-ஆக்கூரில்-தான் தோன்றி அப்பனாரே.
 |