| 239 | அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்; அம் தேன் தெளிகண்டாய்; ஆக்கம் செய்திட்டு
 இம்மை பயக்கும் இறைவன் கண்டாய்; என்
 நெஞ்சே! உன்னில் இனியான் கண்டாய்;
 மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்; வெண்
 காடன் கண்டாய்; வினைகள் போக
 மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய்-மறைக்காட்டு
 உறையும் மணாளன் தானே.
 |