264வெற்பு உறுத்த திருவடியால் கூற்று அட்டானை;
    விளக்கின் ஒளி, மின்னின் ஒளி, முத்தின் சோதி,
ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்தன்னை;
             ஓதாதே வேதம் உணர்ந்தான்தன்னை;
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்தன்னை,
     அமுது உண்டார் உலந்தாலும் உலவா தானை-
அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை;-
      ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.