Try error :java.sql.SQLException: Closed Resultset: next
266மெய்ப் பால் வெண்நீறு அணிந்த மேனியானை,
      வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை,
ஒப்பானை, ஒப்பு இலா ஒருவன் தன்னை,
         உத்தமனை, நித்திலத்தை, உலகம் எல்லாம்
வைப்பானை, களைவானை, வருவிப்பானை,
    வல்வினையேன் மனத்து அகத்தே மன்னினானை,
அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை,-
       ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே!.