| 273 | துப்பினை முன் பற்று அறா விறலே! மிக்க சோர்வு படு சூட்சியமே! சுகமே! நீங்கள்
 ஒப்பனையைப் பாவித்து இவ் உலகம் எல்லாம்
 உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே; என் தன்
 வைப்பினை, பொன் மதில் ஆரூர் மணியை,
 வைகல் மணாளனை, எம்பெருமானை, வானோர் தங்கள்
 அப்பனை, செப்பட அடைவேன்; நும்மால் நானும்
 ஆட்டுணேன்; ஓட்டந்து, ஈங்கு அலையேன்மி(ன்)னே;.
 |