282ஓட்டு அகத்தே ஊண் ஆக உகந்தார்போலும்;
      ஓர் உரு ஆய்த் தோன்றி உயர்ந்தார்போலும்;
நாட்டு அகத்தே நடைபலவும் நவின்றார்போலும்;
          ஞானப்பெருங்கடற்கு ஓர் நாதர்போலும்;
காட்டு அகத்தே ஆடல் உடையார்போலும்;
              காமரங்கள் பாடித் திரிவார்போலும்;
ஆட்டு அகத்தில் ஆன் ஐந்து உகந்தார்போலும்
            அணி ஆரூர்த் திரு மூலட்டானனாரே.