Try error :java.sql.SQLException: Closed Resultset: next
316பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில்,
             பரகதிக்குச் செல்வது ஒரு பரிசு வேண்டில்,
சுற்றி நின்ற சூழ் வினைகள் வீழ்க்க வேண்டில்,
        சொல்லுகேன்; கேள்: நெஞ்சே, துஞ்சா வண்ணம்!
“உற்றவரும் உறு துணையும் நீயே” என்றும்,
    “உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன்” என்றும்,
“புற்று அரவக் கச்சு ஆர்த்த புனிதா!” என்றும்,
           “பொழில் ஆரூரா!” என்றே, போற்றா நில்லே!.