318பாசத்தைப் பற்று அறுக்கல் ஆகும்; நெஞ்சே!
             “பரஞ்சோதீ! பண்டரங்கா! பாவநாசா!
தேசத்து ஒளி விளக்கே! தேவதேவே! திரு
              ஆரூர்த் திருமூலட்டானா!” என்றும்,
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி
       நித்தலும் சென்று அடிமேல் வீழ்ந்து நின்று,
ஏசற்று நின்று, “இமையோர் ஏறே!” என்றும்,
    “எம்பெருமான்!” என்று என்றே ஏத்தா நில்லே!.