318 | பாசத்தைப் பற்று அறுக்கல் ஆகும்; நெஞ்சே! “பரஞ்சோதீ! பண்டரங்கா! பாவநாசா! தேசத்து ஒளி விளக்கே! தேவதேவே! திரு ஆரூர்த் திருமூலட்டானா!” என்றும், நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடிமேல் வீழ்ந்து நின்று, ஏசற்று நின்று, “இமையோர் ஏறே!” என்றும், “எம்பெருமான்!” என்று என்றே ஏத்தா நில்லே!. |