354 | கொள்ளைக் குழைக் காதின் குண்டைப்பூதம் கொடுகொட்டி கொட்டிக் குனித்துப் பாட, உள்ளம் கவர்ந்திட்டுப் போவார் போல உழிதருவர்; நான் தெரியமாட்டேன், மீண்டேன்; கள்ளவிழி விழிப்பார், காணாக் கண்ணால்; கண்ணுளார் போலே கரந்து நிற்பர்; வெள்ளச் சடைமுடியர்; வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே. |