| 367 | ஓராதார் உள்ளத்தில் நில்லார் தாமே; உள் ஊறும் அன்பர் மனத்தார் தாமே;
 பேராது என் சிந்தை இருந்தார் தாமே; பிறர்க்கு
 என்றும் காட்சிக்கு அரியார் தாமே;
 ஊர் ஆரும் மூஉலகத்து உள்ளார் தாமே; உலகை
 நடுங்காமல் காப்பார் தாமே;
 பார் ஆர் முழவத்து இடையார் தாமே பழனநகர்
 எம்பிரானார் தாமே.
 |