| 378 | “கச்சி ஏகம்பனே!” என்றேன், நானே; “கயிலாயா! காரோணா!” என்றேன், நானே;
 “நிச்சல் மணாளனே!” என்றேன், நானே; “நினைப்பார்
 மனத்து உளாய்!” என்றேன், நானே;
 “உச்சம் போது ஏறு ஏறீ!” என்றேன், நானே;
 “உள்குவார் உள்ளத்தாய்!” என்றேன், நானே;
 “அச்சம் பிணி தீர்க்கும் ஐயாற(ன்)னே!” என்று
 என்றே நான் அரற்றி நைகின்றேனே!.
 |