378“கச்சி ஏகம்பனே!” என்றேன், நானே; “கயிலாயா!
                    காரோணா!” என்றேன், நானே;
“நிச்சல் மணாளனே!” என்றேன், நானே; “நினைப்பார்
                மனத்து உளாய்!” என்றேன், நானே;
“உச்சம் போது ஏறு ஏறீ!” என்றேன், நானே;
        “உள்குவார் உள்ளத்தாய்!” என்றேன், நானே;
“அச்சம் பிணி தீர்க்கும் ஐயாற(ன்)னே!” என்று
               என்றே நான் அரற்றி நைகின்றேனே!.