| 399 | ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய்; அடையலர் தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய்;
 காலால் அக் காலனையும் காய்ந்தான் கண்டாய்;
 கண்ணப்பர்க்கு அருள் செய்த காளை கண்டாய்;
 பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய்; பசு
 ஏறிப் பலி திரியும் பண்பன் கண்டாய்;
 மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி
 மன்னும் மணாளன் தானே.
 |