461பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை, பித்தர் ஆம்
                             அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை, இடர்க் கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு
             இளைக்கின்றேற்கு அக் கரைக்கே ஏற வாங்கும்
தோணியை, தொண்டனேன் தூய சோதிச் சுலா
                     வெண்குழையானை, சுடர் பொன்காசின்
ஆணியை, ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே
                     அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.