| 462 | ஒரு மணியை, உலகுக்கு ஓர் உறுதிதன்னை, உதயத்தின் உச்சியை, உரும் ஆனானை,
 பருமணியை, பாலோடு அஞ்சு ஆடினானை, பவித்திரனை,
 பசுபதியை, பவளக்குன்றை,
 திருமணியை, தித்திப்பை, தேன் அது ஆகி, தீம்கரும்பின்
 இன்சுவையை, திகழும் சோதி
 அருமணியை, ஆவடுதண் துறையுள் மேய அரன்
 அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
 |