| 464 | கைம் மான மதகளிற்றை உரித்தான் தன்னை, கடல் வரை வான் ஆகாசம் ஆனான் தன்னை,
 செம் மானப் பவளத்தை, திகழும் முத்தை, திங்களை,
 ஞாயிற்றை, தீ ஆனானை,
 எம்மானை, என் மனமே கோயில் ஆக இருந்தானை,
 என்பு உருகும் அடியார் தங்கள்
 அம்மானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே
 அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!.
 |