| 466 | வேண்டாமை வேண்டுவதும் இல்லான் தன்னை, விசயனை முன் அசைவித்த வேடன் தன்னை, தூண்டாமைச் சுடர் விடு நல் சோதி தன்னை, சூலப்படையானை, காலன் வாழ்நாள் மாண்டு ஓட உதை செய்த மைந்தன் தன்னை, மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும் ஆண்டானை, ஆவடுதண் துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே!. |