473நறுமாமலர் கொய்து, நீரில் மூழ்கி, நாள்தோறும் நின் கழலே
                                       ஏத்தி, வாழ்த்தி,
துறவாத துன்பம் துறந்தேன் தன்னைச் சூழ் உலகில்
                     ஊழ்வினை வந்து உற்றால் என்னே?
உறவு ஆகி, வானவர்கள் முற்றும் வேண்ட, ஒலிதிரை
                 நீர்க்கடல் நஞ்சு உண்டு, உய்யக்கொண்ட
அறவா! அடியேனை, “அஞ்சேல்!” என்னாய்
                 ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.