| 477 | பல் ஆர்ந்த வெண்தலை கையில் ஏந்தி, பசு ஏறி, ஊர் ஊரன் பலி கொள்வானே!
 கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு
 உகந்தீர்; கருதீர் ஆகில்,
 எல்லாரும் என் தன்னை இகழ்வர் போலும்; ஏழை
 அமண்குண்டர், சாக்கியர்கள், ஒன்றுக்கு
 அல்லாதார் திறத்து ஒழிந்தேன்; “அஞ்சேல்!” என்னாய்
 ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே!.
 |