628விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய்! வேத-
          நெறியானே! எறிகடலின் நஞ்சம் உண்டாய்!
எண் ஆரும் புகழானே! உன்னை, “எம்மான்!” என்று
            என்றே நாவினில் எப்பொழுதும் உன்னி,
கண் ஆரக் கண்டிருக்கக் களித்து, எப்போதும்,
       கடிபொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய
அண்ணா! நின் பொன்பாதம் அடையப் பெற்றால்,
     அல்ல கண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே?.