649 | “வெம் மான உழுவை அதள்-உரி போர்த்தான் காண்; வேதத்தின் பொருளான் காண்” என்று இயம்பி, விம்மா நின்று, அழுவார்கட்கு அளிப்பான் தான்காண்; விடை ஏறித் திரிவான் காண்; நடம் செய் பூதத்து அம்மான் காண்; அகலிடங்கள் தாங்கினான் காண்; அற்புதன் காண்; சொல்பதமும் கடந்து நின்ற எம்மான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே. |