| 643 | தாய் அவன் காண், உலகிற்கு; தன் ஒப்பு இல்லாத் தத்துவன் காண்; “மலை மங்கை பங்கா!” என்பார்
 வாயவன் காண்; வரும் பிறவி நோய் தீர்ப்பான் காண்,
 வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும்;
 சேயவன் காண், நினையார்க்கு; சித்தம் ஆரத்
 திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம்
 ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி
 ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே.
 |