6.69 திருப்பள்ளியின் முக்கூடல்
திருத்தாண்டகம்
691ஆராத இன்னமுதை, அம்மான் தன்னை,
            அயனொடு மால் அறியாத ஆதியானை,
தார் ஆரும் மலர்க்கொன்றைச் சடையான்
     தன்னை, சங்கரனை, தன் ஒப்பார் இல்லாதானை,
நீரானை, காற்றானை, தீ ஆனானை, நீள்
         விசும்பு ஆய், ஆழ்கடல்கள் ஏழும் சூழ்ந்த
பாரானை, பள்ளியின் முக்கூடலானை,
             பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே!.