| 806 | வண்டு ஆடு பூங்குழலாள் பாகன் கண்டாய்; மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய்;
 பண்டு ஆடும் பழவினைநோய் தீர்ப்பான் கண்டாய்;
 பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய்;
 செண்டு ஆடி அவுணர் புரம் செற்றான் கண்டாய்;
 திரு ஆரூர்த் திருமூலட்டானன் கண்டாய்;
 கொண்டாடும் அடியவர் தம் மனத்தான் கண்டாய்
 கோடிகா அமர்ந்து உறையும் குழகன் தானே.
 |