| 822 | உறைப்பு உடைய இராவணன் பொன்மலையைக் கையால் ஊக்கம் செய்து எடுத்தலுமே, உமையாள் அஞ்ச,
 நிறைப் பெருந்தோள் இருபதும் பொன் முடிகள்
 பத்தும் நிலம் சேர, விரல் வைத்த நிமலர் போலும்;
 பிறைப்பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும்;
 பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும்;
 சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திருச்
 சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.
 |