| 840 | கல்லாதார் மனத்து அணுகாக் கடவுள் தன்னை; கற்றார்கள் உற்று ஓரும் காதலானை;
 பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும்
 பொன்றி விழ, அன்று, பொரு சரம் தொட்டானை;
 நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க, நிறை
 தவத்தை அடியேற்கு நிறைவித்து, என்றும்
 செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை;
 செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.
 |