577உரியாய், உலகினுக்கு எல்லாம், போற்றி! உணர்வு
            என்னும் ஊர்வது உடையாய், போற்றி!
எரி ஆய தெய்வச் சுடரே, போற்றி! ஏசும்
                 மா முண்டி உடையாய், போற்றி!
அரியாய், அமரர்கட்கு எல்லாம், போற்றி!
           அறிவே அடக்கம் உடையாய், போற்றி!
கரியானுக்கு ஆழி அன்று ஈந்தாய், போற்றி!
            கயிலை மலையானே, போற்றி போற்றி!.