| 782 | விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே; மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே;
 கண் விழியாக் காமனையும் காய்ந்தார் தாமே;
 காலங்கள், ஊழி, கடந்தார் தாமே;
 பண் இயலும் பாடல் உகப்பார் தாமே; பழனை
 பதியா உடையார் தாமே;
 திண் மழுவாள் ஏந்து கரத்தார் தாமே திரு
 ஆலங்காடு உறையும் செல்வர் தாமே.
 |