822உறைப்பு உடைய இராவணன் பொன்மலையைக் கையால் 
         ஊக்கம் செய்து எடுத்தலுமே, உமையாள் அஞ்ச,
நிறைப் பெருந்தோள் இருபதும் பொன் முடிகள்
       பத்தும் நிலம் சேர, விரல் வைத்த நிமலர் போலும்;
பிறைப்பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும்;
              பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும்;
சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திருச்
           சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர் தாமே.