Try error :java.sql.SQLException: Closed Resultset: next
229சொல் ஆர்ந்த சோற்றுத் துறையான் தன்னை;
      தொல்-நரகம் நன்நெறியால்-தூர்ப்பான் தன்னை;
வில்லானை; மீயச்சூர் மேவினானை, வேதியர்கள்
                    நால்வர்க்கும் வேதம் சொல்லி,
பொல்லாதார் தம் அரணம் மூன்றும் பொன்ற,
     பொறி அரவம் மார்பு ஆரப் பூண்டான் தன்னை;
கல்லாலின் கீழானை;- கழி சூழ் நாகைக்
         காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே.