| 373 | “தொல்லைத் தொடு கடலே!” என்றேன், நானே; “துலங்கும் இளம்பிறையாய்!” என்றேன், நானே; “எல்லை நிறைந்தானே!” என்றேன், நானே; “ஏழ்நரம்பின் இன் இசையாய்!” என்றேன், நானே; “அல்லல் கடல் புக்கு அழுந்துவேனை வாங்கி அருள்செய்தாய்!” என்றேன், நானே; “எல்லை ஆம் ஐயாறா!” என்றேன், நானே; என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே!. |