| 858 | பொல்லாத என் அழுக்கில் புகுவான், என்னைப் புறம் புறமே சோதித்த புனிதன் தன்னை;
 எல்லாரும் தன்னையே இகழ, அந் நாள், “இடு, பலி!” என்று
 அகம் திரியும் எம்பிரானை;
 சொல்லாதார் அவர் தம்மைச் சொல்லாதானை; தொடர்ந்து
 தன் பொன் அடியே பேணுவாரைச்
 செல்லாத நெறி செலுத்த வல்லான் தன்னை; திரு
 ஆலம்பொழிலானை, சிந்தி, நெஞ்சே!.
 |