6.89 திருஇன்னம்பர்
திருத்தாண்டகம்
878அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும்; அன்பு உடையர்
                            சிந்தை அகலார் போலும்;
சொல்லின், அருமறைகள் தாமே போலும்; தூநெறிக்கு வழி
                         காட்டும் தொழிலார் போலும்;
வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும்; வீங்கு இருளும்
                      நல் வெளியும் ஆனார் போலும்;
எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர்த் தான்
                                 தோன்றி ஈசனாரே.