| | 6.89 திருஇன்னம்பர் திருத்தாண்டகம்
 | 
 | 878 | அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும்; அன்பு உடையர் சிந்தை அகலார் போலும்;
 சொல்லின், அருமறைகள் தாமே போலும்; தூநெறிக்கு வழி
 காட்டும் தொழிலார் போலும்;
 வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும்; வீங்கு இருளும்
 நல் வெளியும் ஆனார் போலும்;
 எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர்த் தான்
 தோன்றி ஈசனாரே.
 | 
 | உரை |