| 971 | நா ஆர நம்பனையே பாடப் பெற்றோம்; நாண் அற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்;
 “ஆவா!” என்று எமை ஆள்வான், அமரர் நாதன்,
 அயனொடு மாற்கு அறிவு அரிய அனல் ஆய் நீண்ட
 தேவாதி தேவன், சிவன், என் சிந்தை சேர்ந்து
 இருந்தான்; தென் திசைக்கோன் தானே வந்து,
 கோ ஆடி, “குற்றேவல் செய்கு” என்றாலும், குணம்
 ஆகக் கொள்ளோம்; எண் குணத்து உளோமே.
 |