6.12 திருக்கழிப்பாலை
திருத்தாண்டகம்
117ஊன் உடுத்தி, ஒன்பது வாசல் வைத்து(வ்), ஒள்
               எலும்பு தூணா உரோமம் மேய்ந்து,
தாம் எடுத்த கூரை தவிரப் போவார்; தயக்கம்
                பல படைத்தார், தா(ம்)மரையினார்,
கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலைக்
              கழிப்பாலை மேய கபால(அ)ப்பனார்;
வான் இடத்தை ஊடு அறுத்து வல்லைச் செல்லும்
   வழி வைத்தார்க்கு, அவ் வழியே போதும், நாமே.