166தோலின் பொலிந்த உடையார் போலும்; சுடர் வாய்
                 அரவு அசைத்த சோதி போலும்;
ஆலம் அமுதுஆக உண்டார்போலும்;
    அடியார்கட்கு ஆர் அமுதம் ஆனார் போலும்;
காலனையும் காய்ந்த கழலார் போலும்;
    கயிலாயம் தம் இடமாகக் கொண்டார் போலும்;
ஏலம் கமழ்குழலாள் பாகர் போலும்-இடைமருது
                            மேவிய ஈசனாரே.