17 | இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும் இமையவர்க்கும் ஏகம் ஆய் நின்று, சென்று பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியான்; தன் பெருமையே பேச நின்று, மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும்; மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர்- புறம் தாழ்சடை தாழப் பூதம் சூழ, புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே. |