| 318 | பாசத்தைப் பற்று அறுக்கல் ஆகும்; நெஞ்சே! “பரஞ்சோதீ! பண்டரங்கா! பாவநாசா!
 தேசத்து ஒளி விளக்கே! தேவதேவே! திரு
 ஆரூர்த் திருமூலட்டானா!” என்றும்,
 நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி
 நித்தலும் சென்று அடிமேல் வீழ்ந்து நின்று,
 ஏசற்று நின்று, “இமையோர் ஏறே!” என்றும்,
 “எம்பெருமான்!” என்று என்றே ஏத்தா நில்லே!.
 |