| 444 | வானவனாய் வண்மை மனத்தினானே! மா மணி சேர் வானோர் பெருமான், நீயே;
 கானவனாய் ஏனத்தின் பின் சென்றானே! கடிய
 அரணங்கள் மூன்று அட்டானே!
 தானவனாய்த் தண் கயிலை மேவினானே! தன் ஒப்பார்
 இல்லாத மங்கைக்கு என்றும்
 தேனவனே! திருச் சோற்றுத்துறை உளானே! திகழ்
 ஒளியே! சிவனே! உன் அபயம், நானே.
 |