| 539 | கரி உரி செய்து உமை வெருவக் கண்டார் போலும்; கங்கையையும் செஞ்சடை மேல் கரந்தார் போலும்;
 எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும்;
 ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும்;
 விரி கதிரோர் இருவரை முன் வெகுண்டார் போலும்;
 வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும்;
 அரி பிரமர் துதி செய நின்று அளித்தார் போலும்
 அடியேனை ஆள் உடைய அடிகள் தாமே.
 |