| 663 | கார் ஆனை உரி போர்த்த கடவுள் தன்னை; காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்
 வாரானை; மதிப்பவர் தம் மனத்து உளானை;
 மற்று ஒருவர் தன் ஒப்பார், ஒப்பு, இலாத,
 ஏரானை; இமையவர் தம் பெருமான் தன்னை;
 இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க
 சீரானை; திரு நாகேச்சுரத்து உளானை,
 சேராதார் நன்நெறிக்கண் சேராதாரே.
 |