| 729 | சண்டனை நல் அண்டர் தொழச் செய்தான் கண்டாய்; சதாசிவன் கண்டாய்; சங்கரன் தான் கண்டாய்;
 தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய்; சுடர்
 ஒளி ஆய்த் தொடர்வு அரிது ஆய் நின்றான் கண்டாய்;
 மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்; மா
 முனிவர் தம்முடைய மருந்து கண்டாய்
 கொண்டல் தவழ் கொடி மாடக் கொட்டையூரில்
 கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.
 |