| 758 | ஏடு ஏறு மலர்க்கமலத்து அயனும், மாலும், இந்திரனும், பணிந்து ஏத்த இருக்கின்றான் காண்;
 தோடு ஏறும் மலர்க்கடுக்கை, வன்னி, மத்தம்,
 துன்னிய செஞ்சடையான் காண்; துகள் தீர் சங்கம்
 மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு
 - மாமணி காண் வளம் கொள் மேதி
 சேடு ஏறி மடுப் படியும் திருப் புத்தூரில்-திருத்
 தளியான் காண்; அவன் என் சிந்தையானே.
 |