| 881 | வானத்து இளந்திங்கள் கண்ணி தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும்;
 ஊன் ஒத்த வேல் ஒன்று உடையார் போலும்; ஒளி நீறு
 பூசும் ஒருவர் போலும்;
 தானத்தின் முப்பொழுதும் தாமே போலும்; தம்மின் பிறர்
 பெரியார் இல்லை போலும்;
 ஏனத்து எயிறு இலங்கப் பூண்டார் போலும் இன்னம்பர்த்
 தான் தோன்றி ஈசனாரே.
 |